பிரபல நடிகையுடன் இணையும் சூர்யா? by priya | @ | March 16, 2022 9:22 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகை இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிகிறது.இந்த கூட்டணியில் இணையவிருக்கும் கதாநாயகி குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது இதனை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.இவர் இதற்கு முன் உப்பென்னா, ஷ்யாம் சிங்க ராய் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…