ராதே ஷியாம் படத்தால் தற்கொலை செய்துகொண்ட நடிகர் பிரபாஸின் ரசிகர்- அதிர்ச்சியில் படக்குழு

நடிகர் பிரபாஸ் இந்திய சினிமா கொண்டாடும் முக்பெரிய நடிகர். பாகுபலி படங்கள் இவருக்கு பெரிய அந்தஸ்தை கொடுத்துள்ளது.

அதன்பிறகு சாஹோ படம் நடித்த பிரபாஸ் தற்போது ராதே ஷியாம் படம் நடித்திருக்கிறார். படமும் மாஸாக வெளியாகிவிட்டது

வருத்தத்தில் ராதே ஷியாம் படக்குழு
ராதே கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்க கடந்த மார்ச் 11ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகி இருந்தது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு சரியான வரவேற்பு இல்லை.

படத்தின் முதல் நான் இருந்தே மோசமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தற்கொலை செய்துகொண்ட ரசிகர்
ஆந்திர பிரதேசம் குன்னூரில் இருக்கும் 24 வயதான ரவி தேஜா என்ற ரசிகர் ராதே ஷியாம் படத்திற்கு நல்ல வரவேற்பு இல்லை என்ற கஷ்டத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

இதனால் தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என தனது அம்மாவிடமே அவர் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் அறிந்த படக்குழு கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!