போரை நிறுத்துங்கள் புதின்- வைரமுத்து டுவிட்

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில் ‘போரை நிறுத்துங்கள் புதின்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார். 


டுவிட்டரில் வைரமுத்து கூறியுள்ளதாவது:-


மில்லி மீட்டராய்
வளர்ந்த உலகம்
மீட்டர் மீட்டராய்ச் சரியும்


கரும்புகை
வான் விழுங்கும்


பகலை
இருள் குடிக்கும்


கடல்கள் தீப்பிடிக்கும்


குண்டு விழாத நாடுகளிலும்
ஏழைகளின்
மண்பானை உடையும்


ஆயுதம்
மனிதனின் நாகரிகம்;
போர் அநாகரிகம்


போரை நிறுத்துங்கள் புதின் என கூறியுள்ளார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!