காதல் தோல்வியால் வாழ்க்கையை இழந்த பிரபல நடிகை..!! என்ன ஆனார் தெரியுமா..?


சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பணம்., புகழ் போன்றவற்றை சம்பாதிக்கிறார்கள். ஆனால்., எவ்வளவுதான் பணம், புகழ் கிடைத்தாலும் சிலருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.

வாழ்க்கையில் விரக்தியடையும் அவர்கள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர்.

பிரபல நடிகை சிம்ரனின் தங்கை மோனல். இவர் மும்பையில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

2000 ஆம் ஆண்டில் வெளியான ‘பார்வை ஒன்றே போதுமே’ என்கின்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் நடிகர் விஜய்யுடன் பத்ரி படத்தில் நடித்தார். சில படங்கள் நடித்த பிறகு மோனல் சினிமாவில் நடிக்கவில்லை.


மும்பைக்கு சென்று மோனல் தனிமையில் இருந்துள்ளார். மோனலின் நிலைமையை பார்த்து பதறிய குடும்பத்தினர் அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மோனல் எந்த பிரச்சனையும் இல்லை என்று சமாளித்துள்ளார்.

ஒரு நாள் யாரும் எதிர்பாராத நேரத்தில் நடிகை மோனல் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலைக்கு முன்பாக ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில்., ‘நான் இதுவரை நல்ல ஆண்களை பார்க்கவில்லை’ என்று எழுதி இருந்தார்.

எனவே காதலில் தோல்வி அடைந்ததால் நடிகை மோனல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

மோனலின் தற்கொலை சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!