அனுமதி கேட்க மாட்டேன் – விஷால் by priya | @ | January 15, 2022 8:49 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest வீரமே வாகை சூடும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், அனுமதி கேட்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார்.விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், ‘ நான் எப்போதும் புதுமுக இயக்குனர்கள் படத்தில் நடிக்கும் போது, யுவன் சங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என்று இயக்குனரிடம் சொல்லிவிடுவேன். இதற்காக யுவனிடம் அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன். கட்டாயமாக சொல்லிவிடுவேன். ஏன் என்றால் யுவன் எனக்கு நெருங்கிய நண்பர் ‘ என்றார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…