அம்மாடியோவ்.. பிரபல கவர்ச்சி நடிகையின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..?


1990 ஆம் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் விசித்திரா.

தமிழ்., மலையாளம்., தெலுங்கு., கன்னடம் மொழிகளில் இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது.

தமிழில் இவர் நடித்த முத்து., வில்லாதி வில்லன்., சீதனம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து கொண்டிருந்த அவர்., குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.


அப்போது நடிகை விசித்திரா வேளச்சேரியில் தங்கியிருந்தார். அவரின் பண்ணை வீடு ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்லம்பட்டிடையில் இருந்தது.

பண்ணை வீட்டில் தங்கியிருந்த விசித்திராவின் தாய் மற்றும் தந்தையை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றனர். அப்போது விசித்திராவின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தினால் விசித்திரா நொறுங்கி போனார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட விசித்திர புனேவில் செட்டில் ஆகிவிட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!