விஜய் படத்தை பார்த்து எடுக்கப்பட்ட தனுஷின் திரைப்படம் – கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்..

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்சார கண்ணா.

இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கழித்தும் கூட பெரியளவில் பேசப்பட்டது, அதற்கு முக்கிய காரணமே கொரியன் திரைப்படமான Parasite தான். அப்படம் ஆஸ்கார் விருதை வென்ற போது பலரும் இப்படத்தை பார்க்க தொடங்கினர்.

அப்படி பார்த்த நமது தமிழ் பார்வையாளர்கள் பலரும் விஜய்யின் மின்சார கண்ணா படத்துடன் Parasite படத்தை ஒப்பிட்டு பேசிவந்தனர், மேலும் இந்த இரண்டு படங்களிலும் ஒரே குடும்பம் ஒரு வீட்டில் சென்று வெவ்வேறு வேலைகளை பார்ப்பதை தான் ஒப்பிட்டு வந்தனர்.

இதனிடையே இப்படம் குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டியளித்துள்ளார். அதில் விஜய் நடித்த முழு நில முதல் காமெடி படம் மின்சார கண்ணா தான் என கூறியுள்ளார்.

மேலும் அவர் எடுத்த எதிரி மற்றும் மின்சார கண்ணா படத்தை தான் தனுஷின் உத்தம புத்திரன் படமாக எடுத்துள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்.

அந்த இரண்டு படத்தை வைத்து தான் தெலுங்கு படம் ஒன்றை எடுத்தார்கள் என்றும், அதை ரீமேக் செய்து தமிழில் உத்தம புத்திரன் என எடுத்துள்ளார்கள் என்றும் கலகலப்பாக தெரிவித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!