தமிழ் சினிமா நடிகர்கள் நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்காக தற்போது நிதி திரட்டி வருகின்றனர்.
அதற்காக கிரிக்கெட் போட்டி மற்றும் மலேசியாவில் நட்சத்திர விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த விழாவில் விஜய், அஜித், சிம்பு, விக்ரம் என யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அப்போது அஜித் அதற்கு மக்கள் கொடுக்கும் தியேட்டர் டிக்கெட் பணத்தில் இருந்து தான் நாம் சம்பாதிக்கிறோம்.
அதனால் நடிகர் சங்க கட்டடத்துக்கு நாமே நிதி அளிக்கலாம், மக்களிடம் பணம் வாங்க எனக்கு விருப்பம் இல்லை என்று அவர் கூறியதாக நேற்று தனது நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்த எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!