சீரியல் நடிகை சித்ரா இறந்து இன்றோடு ஒரு வருடம்

ரசிகர்கள் ஒரு நடிகரை ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்கள் இல்லை என்றாலும் மறக்க மாட்டார்கள். அப்படி தான் இன்று ஒருவரின் மறைவு நினைத்து ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் படு பிரபலம், இதில் முல்லை என்ற வேடத்திற்கு உயிர் கொடுத்து அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் ஆக்கியவர் நடிகை சித்ரா.

சீரியல் முடியும் வரை முல்லை வேடத்தில் அவர் நடிப்பார் என்று பார்த்தால் கடந்த வருடம் இதே நாள் நம்மைவிட்டு பிரிந்தார். அவரது திடீர் தற்கொலை சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது.

அவர் மறைந்து 1 வருடம் ஆகிவிட்டது, ரசிகர்கள் அவருக்காக நிறைய பதிவுகள் போட்டு அவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!