அட நம்புங்கப்பா… அது வதந்தி இல்லை அதுதான் நிஜம்..!! நடிகர் ஓபன் டாக்..!!


நடிகர் தனுஷ் தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா, வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஏற்கனவே தேனான்டாள் நிறுவனத்திற்கு தனுஷ் கால்சீட் கொடுத்துள்ளதாகவும், சில பிரச்னைகள் காரணமாக தனுஷ் இழுத்தடித்து கொண்டே வருகிறார் எனவும் வதந்திகள் பரவின.

இது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில், அந்த தகவல்கள் வதந்தியல்ல உண்மை தான் என தெரியவந்துள்ளது. இந்த விஷயம் பற்றி நடிகர் தனுஷ் கூறியுள்ளதாவது, என்னுடைய அடுத்த படம் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்-உடன் என்ற பரவிய தகவல்கள் உண்மை தான்.


நான் என்னுடைய இரண்டாவது படத்தை இயக்கவுள்ளேன். என்னுடைய நடிப்பில் உருவாகும் 37 வது படமாக இந்த படம் உருவாகவுள்ளது. மேலதிக தகவல்களை 2018-ம் ஆண்டு வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் பவர்பாண்டி படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர்அவதாரம் எடுக்கவுள்ளார் தனுஷ் மேலும் அவரே ஹீரோவாகவும் நடிக்கவுள்ளார். இந்த படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!