இளம் இயக்குனருடன் இணையும் பாகுபலி நடிகர்..!! அட நம்புங்கப்பா..!!


ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநரான அட்லீ, தன்னுடைய இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கினார். ‘தெறி’ படத்தைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ படத்திலும் விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்ததும் அவர் விஜய்யை வைத்துத்தான் இயக்கப் போகிறார் என்று கூறிவந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

எனவே, இப்போதைக்கு விஜய்யை இயக்க முடியாது என்பதால், பிரபாஸை இயக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ‘மெர்சல்’ படத்துக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத், இந்தப் படத்துக்கும் கதை எழுதுகிறார் என்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!