இதற்காகதான் தேர்தலில் நின்றேன் ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்…!!


நடிகர் விஷால் தயாரித்து நடிக்கும் திரைப்படம் தான் இரும்புத்திரை. இந்தப் படத்தில் நடிகர் விஷாலுடன் அர்ஜுன், சமந்தா மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் வெளீயிட்டு விழா நேற்று நடைபெற்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இவ்விழாவில் பேசிய விஷால் கூறியதாவது, கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய திரைப்படம் இரும்புத்திரை. ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டதால் தான் இப்படம் வர தாமதமாகியது.


என் படம், என் வாழ்க்கை என்பதை பற்றி மட்டும் நான் நினைத்திருந்தால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்றிருக்கவே மாட்டேன். பொதுநலன் சார்ந்து சிந்தித்ததால்தான் நான் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நின்றேன்.

என்னைப் பற்றி பல்வேறு கருத்துகள் மற்றும் அவதூறுகள் வரலாம். ஆனால், என்னை பொறுத்தவரை நான் கண்ணாடியைப் பார்க்கும்போது என்னை நான் குற்றமற்றவனாக பார்க்க வேண்டும் என்று தான் நினைப்பேன். அப்படித்தான் தற்போதும் நடக்கிறேன். கண்ணாடிதான் என்னுடைய நண்பன் என்றார்.

நான் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் நிற்கமுடியாமல் போனதற்கு இயக்குனர் மித்ரன் மகிழ்ந்திருப்பார். ஏனெனில் ஒருவேளை நான் நின்றிருந்தால் இன்னும் படம் வெளிவர தாமதமாயிருக்கும் என்று கலகலப்பாகப் பேசினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!