புதிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய ஓவியா

தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய ஓவியா சென்னை: வெள்ளைக்கல் மூக்குத்தியில் மெல்லிய புன்னகையுடன் பளிச்சென்று இருக்கும் ஓவியாவின் நியூ போட்டோ வெளியாகியுள்ளது.

தமிழில் களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. ஹெலன் நெல்சன் என்ற பெயருடன் சினிமாவுக்கு வந்த அவருக்கு ஓவியா என பெயர் சூட்டியது இயக்குநர் சற்குணம்தான் என அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறினார் ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று உண்மையாக இருந்ததன் மூலம் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஓவியாவுக்கு ரசிகர்களானார்கள்.

அவரின் உண்மையான கேரக்டரை பார்த்து வியந்த ரசிகர்கள் அவருக்கு என தனி ஆர்மியை உருவாக்கினார்கள். நடிகைகளுக்கு முதன் முதலில் ஆர்மி என ரசிகர்கள் உருவாக்கியது ஓவியாவுக்குதான் என கூறப்பட்டது.

ஓவியாவின் குணத்துக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் நடிகை ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வெள்ளைக்கல் மூக்குத்தியுடனும் கூல் ஸ்மைலுடனும் பளிச்சென உள்ளார் ஓவியா. ஓவியாவின் இந்த நியூ போட்டோவை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பலர் ரீட்விட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.