தம்பி விஜய் பயப்படுகிறார்! – மீண்டும் விஜய் குறித்து சர்ச்சையாக பேசிய சீமான்..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
மேலும் டாப் நடிகராக விளங்கும் விஜய் குறித்து யார் என்ன பேசினாலும் அது சமூகவலைத்தளத்தில் பெரிய பேச்சுபொருளாக மாறிவிடும்.

அதன்படி தற்போது இயக்குனர் மற்றும் அரசியல் கட்சியின் தலைவருமான சீமான் நடிகர் விஜய் குறித்த விமர்சனங்களை பேட்டி ஒன்றில் வைத்துள்ளார்.

அதில் “சமூக பிரச்சனைகளை என் தம்பி விஜய் பேசனும், அவர் திடீரென பேசி பிறகு பயப்படுகிறார். ஆனால் அவர் இருக்கும் உயரம் அவருக்கே தெரியாது எனவும், தம்பி சூர்யாவிற்கு இருக்கும் துணிச்சல் விஜய்க்கு இல்லை” என்றும் பேசியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!