நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு – எஸ்.ஜே.சூர்யா

இயக்குனராக இருந்து தற்போது நடிகராக மாறி இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தன்னுடைய நாடி, நரம்பு, கழுத்து முதுகு, தொண்டை எல்லாம் போச்சு என்று கூறியிருக்கிறார்.

நல்ல வித்தியாசமான படைப்புகளைக் கொடுக்கக்கூடிய இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. சில ஆண்டுகளாகவே அவர் எந்த ஒரு படத்தையும் எடுக்கவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா நடித்த மாநாடு படம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியாக இருக்கிறது. இதில் காவல்துறை அதிகாரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சமீபத்தில் இதன் டப்பிங் வேலைகளை முடித்த அவர் தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதில், 8 நாள் மாநாடு டப்பிங் வேலையை 5 நாளில் முடித்தேன். என்னுடைய நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு. குறைந்தது 10 நாள் ஓய்வு வேண்டும் என்று எல்லா அவயங்களும் கெஞ்சுகின்றன. ஆனால், கடைசி அவுட்புட்டை பார்த்த பிறகு, உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்லிருக்கிறேன்… தீபாவளி நவம்பர் 25 தான்டா. என்று தன் பாணியில் எழுதியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!