துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

போடா போடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி.
இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார்.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய துவங்கின. தற்போது வரலட்சுமி கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.

தமிழ் திரையுலகை விட தெலுங்கு திரையுலகில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சமீபகாலமாக இவர் நடிக்கும் தெலுங்கு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைகிறது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

அரசி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை வரலட்சுமி வழக்கறிஞராக நடிக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!