பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நடிகையை பிச்சை எடுக்க வைத்த முன்னணி நடிகர்…!!


சித்தியின் பிடியில் இருந்த நடிகை ஜெயமான நடிகரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.

இனி இவர்தான் நமக்கு எல்லாம் என்று இருந்தார். அந்த நடிகரின் படங்கள் எல்லாம் வரிசையாக ஊத்தி கொள்ள. ஒரு பிரேக்குக்காக காத்திருந்தார்.

எனவே தனது காதலரை கைதூக்கி விட சொந்த படம் எடுக்க முடிவு செய்தார். அதன்படி குழந்தைகள் ஊதி விளையாடும் பொருளின் பெயரில் ஒரு படத்தை எடுத்தார்.

அதில் இவரும் கதாநாயகியாக நடித்துள்ளார். படம் எல்லாம் முடிந்துள்ள நிலையில் அதனை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார்.

அதே நேரம் படத்தை கடன் வாங்கித்தான் தயாரித்துள்ளார். கடன்காரர்கள் கடனை கேட்டு நெருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதனை கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் ஜெயமான நடிகர் வராமல் தட்டி கழிக்கிறாராம்.

இதனால் பிக்பாஸ் வீட்டிற்கு கூட படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக அவர் மட்டுமே தனியாக வந்திருந்தார்.

ஜெயமான நடிகர் படம் சம்பந்தப்பட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததோடு, காதலையும் பிரேக் அப் செய்து விட்டாராம்.


இதனால் படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாமல், கடனையும் கட்ட முடியாமல் காதலரை நம்பி மோசம் போன வருத்தத்தில் உள்ளாராம் அந்த நடிகை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!