மீண்டும் சென்சேஷன் இயக்குனருடன் இணைவாரா தளபதி விஜய்.. இயக்குனரே கூறிய பதில்

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் தளபதி விஜய். சமீபத்தில் தான் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது.
தளபதி விஜய்யின் திரை வாழ்வில் பல திரைப்படங்கள் பல சோதனைகளை தாண்டி வெளியாகியுள்ளது.

அப்படி மிகப்பெரிய சோதனைகளை தாண்டி வெளியான திரைப்படம் தான் தலைவா. இப்படத்தை ஏ.ல். விஜய் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் ஏ.ல். விஜய், தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சமீபத்தில் பேசியுள்ளாராம்.

இதில் ” நாங்கள் இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். அவருக்கான கதைகள் வரும்போது கண்டிப்பாக அவரிடம் சொல்லவேன். நிச்சயமாக விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்குவேன் ” என்று கூறியுள்ளாராம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!