கனவு நிறைவேறியது – சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வரும் சாக்ஷி அகர்வால், என் கனவு நிறைவேறியது என்று பட விழாவில் பேசி இருக்கிறார்.

பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பஹிரா. இதில் கதாநாயகிகளாக அமைரா, ஜனனி, சாக்ஷி அகர்வால், காயத்ரி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

இதில் சாக்ஷி அகர்வால் பேசும் போது, பஹிரா படத்தின் இயக்குனர் ஆதிக் என்னிடம் கதை சொல்லும் போது, இந்த படத்தில் 7 கதாநாயகிகள் என்று சொன்னார். நான் எப்படி இயக்குவார் என்று பயந்தேன். ஆனால், சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

படத்தின் நாயகன், பிரபு தேவா சாருக்கு மிகப்பெரிய ரசிகை நான். உங்கள் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. 2 வருடமாக இப்படத்திற்கு கடின உழைப்பை படக்குழுவினர் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!