அரவிந்தசாமியின் படங்களில் இது முக்கிய படமாக இருக்கும் – இயக்குனர் செல்வா அதிரடி

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் அரவிந்தசாமி. இவர் சமீபத்தில், நவரசா ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்ற, ரௌத்திரம் எனும் படத்தை இயக்கி, இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.

மேலும் சமீபத்தில் இவர் போலீசாக நடித்துள்ள, வணங்காமுடி படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன், சாந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெயபிரகாஷ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தை ‘நான் அவன் இல்லை’ பார்ட் 1 & 2 ஹிட் படங்கள் இயக்கிய செல்வா இயக்கியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் செல்வா கூறியதாவது :

‘” இது போலீஸ் கதை. வழக்கமான டமால்-டூமில் போலீஸ் கதையாக இல்லாமல் தன்னுடைய புத்திச்சாலித்தனத்தை கொண்டு ஹீரோ எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார்.

அந்த வகையில் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் வழக்குகள் எப்படி உள்ளே நுழைகிறது என்பதையும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அவர் எவ்வித முயற்சி எடுக்கிறார் என்பதையும் விறுவிறு திரைக்கதையில் காட்சிப்படுத்தியுள்ளேன். அரவிந்தசாமியின் படங்களில் இது முக்கிய படமாக இருக்கும் ” என அதிரடியாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!