தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.
ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தில் இருந்து, நட்பு எனும் பாடல் அனிருத் குரலில் பாடி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் வருகிற அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி 5 மொழிகளில் பிரம்மாண்டமாக, இப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இப்படம் வெளிவராது என்றும், அடுத்த வருடம் ஜனவரி 26ஆம் தேதி தான் இப்படம் வெளிவரும் என்றும் தகவல் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து, படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!