புதிய உற்சாகத்துடன் அந்தகன் டப்பிங் பணிகளை தொடங்கிய நவரச நாயகன்

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் அந்தகன் படத்தில், நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் உடனடியாக தொடங்கி நடைபெறுகின்றன.

பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருடன் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கார்த்திக், குணமடைந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது காட்சிகளை விரைவாக முடித்துக்கொடுத்தார். அத்துடன், உற்சாகத்துடன் இன்று டப்பிங் பணியையும் தொடங்கினார். டப்பிங் ஸ்டுடியோவில் தியாகராஜன் மற்றும் பிரசாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடித்துள்ள அந்தகன் விரைவில் ரிலீசாக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!