இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.
இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து அக்கினேனி குடும்ப மருமகளாகி விட்டார்.
இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு பாக்கெட் மணிக்காக பல்வேறு வேலைகளை செய்துள்ளார்.
அதில் பல கஷ்டங்களையும் அனுபவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, நான் 14 வயதில் இருந்தே என்னுடைய தேவைகளுக்காக சம்பாதிக்க தொடங்கி விட்டேன். வீட்டில் எதற்காகவும் பணம் கேட்க மாட்டேன்.
மேலும் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக திருமண மண்டப வாசலில் நின்று பன்னீர் தெளிக்கும் வேலையை செய்துள்ளேன். இன்று பல கோடி சம்பாதித்தாலும் அன்று பன்னீர் தெளித்து 1000 ரூபாய் சம்பாதித்த கிக் வரவில்லை என்கிறார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!