தமிழ் சினிமாவில் தங்களுக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகளில் திருவிழா தான்.
அந்த வகையில் அடுத்த வருடம் தீபாவளிக்கு இவர்கள் இருவரின் படங்களும் வரவிருப்பதாக ஒரு செய்தி உலா வருகின்றது.
இந்நிலையில் விஜய், அஜித் ரசிகர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் தாக்கி பேசி வருவார்கள்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
ஆனால், ரியல் லைஃபில் இருவரும் நல்ல நண்பர்களே, அதற்கு உதாரணமாக வேலாயுதம் படம் எடுத்த போது அஜித் குறித்து விஜய் கூறிய தகவலை மோகன்ராஜா பகிர்ந்துள்ளார்.
இதில் அவர் கூறுகையில் ‘மங்காத்தா, வேலாயுதம் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் தான் நடந்து வந்தது, அப்போது அஜித் சார் எங்களை அழைத்து ப்ரியாணி விருந்து வைத்தார்.
அதை தொடர்ந்து விஜய் சார் என்னிடம், என்ன மனுஷங்க அவரு, செம்ம அழகா இருக்கார்ல, என்று பெருமையாக பேசினார்’ என்று கூறியுள்ளார்.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!