தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியரான பிரபல தமிழ் நடிகரின் மகன் – குவியும் வாழ்த்துக்கள்

சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற பிரபல தமிழ் நடிகரின் மகன், தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஜினியின் ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமானவர் சின்னி ஜெயந்த். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் ஸ்ருஜன் ஜெய், கடந்தாண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியாவிலேயே 75வது இடம் பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று அசத்தினார்.

இதற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் தொலைபேசி வாயிலாக சின்னிஜெயந்தின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஸ்ருஜன் ஜெய், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஸ்ருஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!