திரையுலகில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ஷாலினி அஜித்..

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களில் துவங்கி முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி.

இவர் நடிப்பில் வெளியான அலைபாயுதே, அமர்க்களம், காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல படங்கள் இன்னும் மனதில் இருந்து நீங்காதவை.

நடிகை ஷாலினி, தல அஜித்தை காதலித்து கடந்த 2000ஆம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருக்கும் நடிகை ஷாலினி தற்போது மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.

அதுவும் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஷாலினி முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!