மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது நவரசா வெப் தொடர் உருவாகி உள்ளது. இதில் அவர், கவுதம் மேனன் இயக்கி உள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 6-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் சூர்யா.

இந்நிலையில், நடிகர் சூர்யா நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு சூர்யா பிறந்தநாளன்று வெளியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகர் சூர்யா ஏற்கனவே பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!