மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அக்‌ஷய் குமார்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்‌ஷய் குமார் அடுத்ததாக பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனருடன் மீண்டும் இணைய இருக்கிறார்.

இந்தியாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் பிரியதர்ஷன். இவரின் இயக்கத்தில் கடந்த ஆண்டே மோகன்லால் நடிப்பில் ‘மரக்கையர்’ படம் தயாராகிவிட்டது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியில் ‘ஹங்கமா 2’ படத்தை இயக்கி முடித்து இருக்கும் பிரியதர்ஷன், அடுத்ததாக அக்‌ஷய் குமாரை வைத்து படம் இயக்க இருக்கிறார்.

பிரியதர்ஷன் – அக்‌ஷய் குமார் கூட்டணியில் வெளிவந்த “ஹேரா பேரி”, “கரம் மசாலா”, “பூல் புலையா” போன்ற படங்கள் மெகா ஹிட் அடித்தன. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!