நாட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் வெளியே சொல்லக் கூடியவர் நடிகர் சித்தார்த்.
அதற்கு உதாரணமாக அவரது டுவிட்டர் பக்கம் உள்ளது. நல்லது, கெட்டது என எந்த விஷயம் பற்றியும் யாருக்கும் அஞ்சாமல் கூறிவிடுவார். அதனால் அவர் நிறைய பிரச்சனைகளை கூட சந்தித்துள்ளார்.
இன்று காலை பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் அவர்களின் மரண செய்தி வந்தது. பிரபலங்கள் அனைவரும் தங்களது வருத்தத்தை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்கள்.
அப்படி நடிகர் சித்தார்த்தும் அவரது மரணத்திற்கு ஒரு சோகமாக பதிவை புகைப்படத்துடன் போட்டார். அதைப்பார்த்த ஒருவர் இவர் பார்க்க அக்ஷய் குமார் போல் உள்ளார் என கமெண்ட் செய்துள்ளார்.
அதைப்பார்த்த சித்தார்த் கோபமாக, டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு என கமெண்ட் செய்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!