பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டுக்கு செல்லும் அட்லீ – தயாராகும் பிரமாண்ட திரைப்படம்

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.

தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அட்லீ, அடுத்ததாக விஜய்யுடன் கைகோர்த்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் அட்லீ. இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறுகின்றனர்.

இந்நிலையில், ஷாருக்கான் படத்தை முடித்த பின், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைய உள்ளாராம் அட்லீ.

ராஜா ராணி பட பாணியில் இப்படத்திற்கு அட்லீ கதை அமைத்துள்ளதாகவும், இந்த கதை ஜூனியர் என்.டி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போனதால், அவர் அதில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!