சூரரை போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வந்தார்.
இப்படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் தற்போது திரைப்படங்களின் ஷூட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யா 40 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 12 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!