ஞானவேல் ராஜா மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்த அவரது இணை தயாரிப்பாளர் அசோக்குமார் என்பவர் கடன் பிரச்சினையால் ஏற்பட்ட தொல்லை காரணமாக 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது சினிமா பைனான்சியர் போத்ரா மீது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் போத்ரா இறந்து விட்ட நிலையில் இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி தண்டபாணி, ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!