தமிழ் சினிமாவில் தற்போது தரமான படங்கள் உருவாகி வருகின்றன, எந்த அளவிற்கு என்றால் உலக சினிமாவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு நிச்சியமாக இருக்கும் என்று கூறலாம்.புதுமுக இயக்குனர்கள் முதல் படத்திலேயே மிக பெரிய அளவில் பாராட்டுகள் பெற்றுவருகிறார்கள். உரியடி, துருவங்கள் 16,அறம் ,அவள், அருவி போன்ற படங்கள் தமிழ் சினிமாவிற்கு புதிது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்றுவரும் படம் அருவி. சமூக நல் விசயங்களை அப்பட்டமாய் தோல் உரித்தது.படக்குழு தற்போது பெரும் மகிழ்ச்சியின் உள்ளது.
பல நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் இப்படத்தை வாழ்த்தியுள்ளனர். இத்தனைக்கும் சொந்தக்காரர் இயக்குனர் அருண் பிரபு தான்.
ஓரிரு எதிர் கருத்துக்கள் வந்தாலும் பொருமையாக கையாள்கிறார் அவர். இவர் ராதிகா சரத்குமார் நடித்துள்ள பல சீரியல்களில் பணியாற்றியுள்ளாராம். அதிலும் முக்கியமாக அண்ணாமலை சீரியல்.அருவி அவருக்கு முதல் படமாக இருந்தாலும் எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்புகிடைத்துள்ளது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!