சரியான செருப்படி கேள்வி… ரசிகருக்கு தன் ஸ்டைலில் பதிலளித்த பார்த்திபன்

நாளை சிரிக்க, சிறக்க இன்று உள்ளிருப்போம் உறவே’ என்ற விழிப்புணர்வு பதிவை நடிகர் பார்த்திபன் வெளியிட்டு இருந்தார்

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க அரசு 2 வாரங்கள் ஊரடங்கு பிறப்பித்தும் அடங்கவில்லை. இதையடுத்து இன்று முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்து உள்ளது. இந்த ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று பிரபலங்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘நாளை சிரிக்க, சிறக்க இன்று உள்ளிருப்போம் உறவே’ என்ற விழிப்புணர்வு பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவில், “உள்ளிருந்தா உணவு யாரு தருவாங்க” என்று கேள்வி எழுப்பினார். இது வலைத்தளத்தில் பரபரப்பானது.

இதையடுத்து அந்த ரசிகருக்கு பதில் அளித்து பார்த்திபன் மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், “சரியான செருப்படி கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கி விடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தா உணவை உண்ண நாமிருப்போம் நாளை. இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்” என்று தன் ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!