திருநெல்வேலியில் களமிறங்கிய அஜித்தின் குழு… குவியும் பாராட்டுகள்

நடிகர் அஜித் வழிகாட்டுதலின் கீழ் தக்‌ஷா குழுவினர் உருவாகியுள்ள டிரோன் கேமராக்கள் கொரோனா தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாகப் பரவி வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தக்‌ஷா குழுவும் கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அஜித்தின் வழிகாட்டுதலின் கீழ் தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன்கள், கொரோனா பரவும் பகுதிகளில் கிருமிநாசினியை தெளித்து வருகின்றன. இந்தக் குழு தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் சாலைகளில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். எனவே அரசுக்கு உதவி வரும் தக்‌ஷா குழுவை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!