பிரபல நடிகையின் 15 வருட சினிமா இரகசியம் இதுதானாம்..!! பாருங்க ஷாக் ஆயிருவீங்க..!!


வருஷத்துக்கு 200 படங்கள் வருகின்றன. அதில் பாதி புதுமுக நடிகைகள் நடிகிறார்கள். பல படங்களில் தோன்றும் நடிகைகள் அழகு, திறமை இருந்தும் காணாமல் போய்விடுகிறார்கள். இன்னும் சிலர், கிடுகிடுவென முன்னணி நடிகை அந்தஸ்துக்கு வந்து திடீரெனே சறுக்கி சரிந்துவிடுவார்கள்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களுக்கென ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து வைத்திருப்பார்கள். அந்த வரிசையில், சிம்ரன், நயன்தாரா அடுத்து திரிஷா தான். 2002-ம் ஆண்டு வெளியான “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் திரிஷா.


தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ஹிட் ரகம். விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்ட் வந்தார்.

மேலும், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளும் காலூன்றியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.

சினிமாவிற்கு வருடா வருடம் பல நடிகைகள் அறிமுகமாகிறார்கள் அழகு, திறமை இருந்தும் அவர்களால் ஏன் சினிமாவில் நிலைக்க முடியவில்லை..? உங்களால் எப்படி 15 வருடம் திரைத்துறையில் தாக்கு பிடிக்க முடிந்தது..? என்ற கேள்விக்கு பதிலளித்த திரிஷா “அது மிகவும் எளிது, அனைவருடன் அன்புடனும், மரியாதையுடனும் நடந்துகொண்டாலே போதும். மற்றபடி பெரிய தகுதிகள் எதுவும் வேண்டாம்” என்று சில்லறையை சிதறவிடுகிறார் திரிஷா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!