நடிகரைப் பற்றி அவரின் மனைவியிடமே கேவலமாக கூறிய பிரபல நடிகர்..!! யாருனு தெரியுமா..?


தமிழ் சினிமாவில் 1990 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகர் சீயான் விக்ரம். அவர் நடித்த அனைத்து படங்களுமே தோல்விகளை தழுவின.

இதனால் கிட்டதட்ட 10 வருடங்களுக்கு பிறகு அவர் நடித்த வந்த சேது படம் தான் அவரை மக்களுக்கு அடையாளம் காண்பித்தது.

பிறகு பல விதியாசமான கதாபாத்திரங்களில் மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார் விக்ரம்.

இவர் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஐ படத்திற்காக இவர் எடுத்த முயற்சிகளை இப்போதும் தாங்கி கொள்ள முடியாது.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் சமீபத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த போது விக்ரம் பற்றி பேசியுள்ளார்.


அதில் நான் விக்ரமின் சேது படத்தை பார்த்து கொண்டிருந்தேன் அப்போது எனது அருகில் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தார்.

படம் முடிந்ததும் அந்த பெண் எண்ணிடம் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

அதற்கு நான் விக்ரமிற்கு இது முதல் படமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லையெனில் வேறொரு ஹீரோ நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினேன்.

உடனே அவர் இல்லை சார் விக்ரம் அவர்களுக்கு சரியான படம் தான் என்று கூறிவிட்டு கிளம்பினார்.

பிறகு தான் அவர் நடிகர் விக்ரமின் மனைவி என்பது எனக்கு தெரிந்தது என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!