சூர்யா – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யா – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வேட்டி சட்டை அணிந்திருக்கும் சூர்யா, கையில் வாலுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். அந்த மாஸான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!