முடிவுக்கு வந்தது சிம்புவின் ‘மாநாடு’

தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனை தனது சமூக வலைதள பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ள வெங்கட் பிரபு, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து பின்னணி பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாம்.

மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். வருகிற மே மாதம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!