செல்வராகவன் மீது காதல் வர அந்த கதைதான் காரணம் – கீதாஞ்சலி செல்வராகவன்

முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் மீது தனக்கு காதல் வர காரணமான கதை பற்றி அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் வீடியோ மூலம் கூறியிருக்கிறார்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த செல்வராகவன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே ஆகிய படங்களை இயக்கினார்.

சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2010ஆம் ஆண்டும் செல்வராகவன் உருவாக்கி கானல் நீர் என்ற கதையை படித்துதான் செல்வராகவன் மீது காதல் வயப்பட்டேன் என்று கூறுகிறார். மேலும் கானல் நீர் திரைப்படம் தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!