பிரபல பாடகர்களை நடிகர்களாக மாற்றிய குஷ்பு

பிரபல பாடகர்களான இருவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்து நடிகர்களாக மாற்றியிருக்கிறார் குஷ்பு.

குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’அரண்மனை 3’. இதில் சுந்தர் சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விசாகா சிங், சாக்‌ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடந்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிகர்கள் மட்டுமின்றி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருமே நடிகர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னணி பாடகர்கள் இருவர் அரண்மனை 3 படத்தில் நடிகர்களாகியிருக்கின்றனர். இந்தத் தகவலை நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர்களான ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும் அரண்மனை 3 படத்தில் ஒரு பாடலை பாடியதோடு அந்த பாடலுக்கு அவர்களே நடித்துள்ளனர். இதை படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு அந்த புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!