சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஏன்?- முதன்முறையாக கூறிய வெற்றிமாறன்

நடிகர் சூர்யா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த சூரரைப் போற்று வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்றுவிட்டது. OTT தளத்தில் வெளியான அப்படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன.

அடுத்து சூர்யாவின் நடிப்பில் தயாராகும் பெரிய படம் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பின்பு இன்னும் தொடங்கவில்லை.

காரணமும் இதுவரை வெளியாகாத நிலையில் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் தற்போது கூறியுள்ளார். படப்பிடிப்பு தொடங்காததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. இப்போது ஒரு படத்தில் நான் கமிட்டாகி வேலை பார்த்து வருகிறேன்.

மற்றொன்று வாடிவாசல் படத்திற்கு 500 முதல் 1000, 2000 பேர் தேவைப்படுகிறார்கள், அவர்களின் பாதுகாப்பு அவசியம். இந்த Vaccine எப்படி பயன்படுகிறது என்பதை எல்லாம் பார்த்து தான் படப்பிடிப்பு செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!