ராஜசிங்கம் – விமர்சனம்

நடிகர் நாகர்ஜூனா
நடிகை சினேகா
இயக்குனர் விஜயேந்திர பிரசாத்
இசை கீரவாணி
ஓளிப்பதிவு ஷியாம் கே நாயுடு
திரைப்பட போக்கு…
வாரம் 1
தரவரிசை 12
நாயகி சினேகா, உயிர் போகும் நிலையில் தன் குழந்தையை ஆற்றில் விடுகிறார். அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார் நாசர். குழந்தை 10 வயதான நிலையில், தனது தந்தை யார் என்ற விவரத்தை அறிய முயற்சி செய்கிறார். இதற்கிடையில் அந்த குழந்தையை கொல்ல ஒரு கும்பல் முயற்சி செய்கிறது.

இறுதியில் அந்த குழந்தை தனது தந்தை யார் என்ற விவரத்தை அறிந்தாரா? குழந்தையை கொள்ள நினைப்பது யார்? காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

தெலுங்கில் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ராஜன்னா திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ராஜசிங்கம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. சரித்திர படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் ராஜசிங்கம் திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பிரபல கதாசிரியரும், இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் ரசிகர்கள் கவரும் வகையில் இயக்கி இருக்கிறார். நாகார்ஜுனா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். சினேகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. சிறுமி ஆனியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இப்படத்திற்காக பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசையிலும் கவர்ந்திருக்கிறார். ஷ்யாம் கே நாயுடு, அனில் பந்தாரி, கன்று பூர்ணா ஆகியோரின் ஒளிப்பதிவை பாராட்டலாம்.

மொத்தத்தில் ராஜசிங்கம் பிரம்மாண்டம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!