விசாரித்த பின் செய்தியை போடுங்கள்- நடிகை நயன்தாரா தரப்பு கொடுத்த விளக்கம்

நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி இருந்தது. OTT யில் வெளியான இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

அடுத்தபடியாக நடிகை நயன்தாரா அண்ணாத்த பட ஷுட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் படக்குழுவில் சிலருக்கு கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தான் நடிகை நயன்தாரா வேலு நாச்சியாரின் கதையில் நடிக்கப்போவதாக தகவல் வைரலாக பரவியது.

ஆனால் அதில் உண்மை இல்லையாம், எந்த செய்தியாக இருந்தாலும் விசாரித்து போடுங்கள் என நயன்தாரா தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!