முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் மாமன்னன் படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கவுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

‘மாமன்னன்’ படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை மாமன்னன் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!