சிவகார்த்திகேயனின் படத்தை இயக்குவது உண்மையா? – ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு விளக்கம்

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் அதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியது. அதன்பின் விஜய்யின் 65 படத்தை இயக்குவதாக இருந்தார். இறுதியில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார். தற்போது விஜய்யின் 65-வது படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தமாகி உள்ளார்.

இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில், அதற்கு இயக்குனர் முருகதாஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயனை வைத்து அவர் படம் இயக்குவதாக பரவும் செய்திகள் உண்மையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முருகதாஸ் அடுத்ததாக அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!