அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட கணவர்! நடிகை எடுத்த அதிரடி முடிவு

வெயில் படம் மூலமாக தமிழுக்கு வந்தவர் நடிகை பிரியங்கா நாயர். மலையாள சினிமாவை சேர்ந்த இவருக்கு சொந்த ஊரில் ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்.

தொலைபேசி, செங்காத்து பூமியிலே என சில படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை கடந்த 2012 ல் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பின் சென்னையில் இருவரும் வாழ்ந்து வந்தனர். பிரியங்கா கர்ப்பம் அடைந்த பின் பிரசவத்திற்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டிற்கு சென்றார்.

அதன் பின் அவர் சென்னைக்கு திரும்பவே இல்லையாம். 2013 ல் முகுந்த் ராம் என்ற குழந்தையும் பிறந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 2015 ல் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கணவருக்கு எதிராக 4 வழக்குகளை பதிவு செய்திருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ள பிரியங்கா, தான் ஏன் விவாகரத்து செய்தேன் என கூறியுள்ளார். இதில் தன் கணவர் லாரன்ஸ் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளார். மேலும் சினிமாவில் நடிக்க தடைவிதித்தார் அதனால் தான் பிரியமுடிவெடுத்தேன் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.