ரசிகர்களை சந்தோசப்படுத்த ரெடியாகும் ஓவியா..!! எப்படி தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஓவியா. இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஓவியா ஆர்மியை ரசிகர்கள் உருவாக்கும் அளவுக்கு இவரது புகழ் உச்சத்திற்கு சென்றது.

நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் கடந்து விட்டாலும், சமூக வலைதளங்களில் இன்னும் ஓவியா ஆர்மி இன்னும் செயல்பாட்டில் உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இவர் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா படத்தின் 3-ம் பாகத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.


ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தாரே தவிர, அவர்களுடன் கலந்துரையாடவில்லை. விரைவில் லைவில் பேசுவேன் என்று கூறி இருந்தார். ஆனால் இதுவரை பேசவில்லை. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் முதன் முறையாக டுவிட்டரில் ரசிகர்களுடன் வரும் 20-ம் தேதி இரவு 8 மணிக்கு கலந்துரையாடவுள்ளார், ரசிகர்களே ஓவியாவுடன் பேச ரெடியாக இருங்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!