பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப்போவது இவரா?- சித்ரா போல் வருமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவிற்காக பார்க்கும் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். அந்த விஷயம் உங்களுக்கே தெரியும், ஆனால் இப்போது அவர் இல்லை.

சீரியலில் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, ஆனால் யாரையாவது சீரியல் குழு போட்டோ ஆக வேண்டும். தற்போது நடிகையை தேர்வு செய்யும் வேலையில் குழுவினர் உள்ளார்கள் என்கின்றனர்.

அதோடு சீரியல் குழுவினர் அதே விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சரண்யாவை முல்லையாக நடிக்க வைக்கலாம் என பேசி வருகிறார்களாம்.

சரண்யா நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்துள்ளார், அவர் சித்ராவின் கடைசி நாளில் கூட உடன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!