கடத்தல் காரன் – விமர்சனம்

நடிகர் கெவின்
நடிகை ரேணு செளந்தர்
இயக்குனர் எஸ் குமார்
இசை எல்.வி.கணேஷ்
ஓளிப்பதிவு எஸ்.ஸ்ரீராம்
நாயகி ரேணு சவுந்தர் கல்லூரி விட்டு வரும் வழியில் செயினை திருடுகிறார்கள். இதை நாயகன் கெவின் சண்டை போட்டு மீட்டு கொடுக்க இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்களின் காதல் ரேணுவின் அப்பாவிற்கு தெரிய வர, வேணுவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நினைக்கிறார்.

இதையறிந்த கெவின், ரேணுவை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு சென்று திருமணம் செய்யலாம் என்று முடிவுக்கு வருகிறார்.

இந்நிலையில், திருடுவதை முக்கிய தொழிலாக கொண்டிருக்கும் கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள், திருமண வீட்டில் பொருட்களோடு மணப்பெண் ரேணு சவுந்தரையும் தெரியாமல் கடத்திவிடுகிறார்கள்.

இறுதியில் கடத்தல் கும்பலிடமிருந்து ரேணு சௌந்தர் தப்பித்தாரா? காதலன் கெவினுடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதி கதை.

நாயகனாக கெவின் நல்ல முகம். ஆனால் நடிப்புதான் வரவில்லை. பெண் வேடத்தில் அழகாக இருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகி ரேணு சவுந்தர் கிராமத்துப் பெண் வேடத்தில் கச்சிதம். நடனத்திலும் ஈர்க்கிறார்.
மற்ற நடிகர் நடிகர்கள் புதுமுகங்கள் என்பதால் மன்னித்து விடலாம்.

சுகமாய் வருடும் காதல் பாட்டு, குத்துப் பாட்டு என ரகத்துக்கு இரண்டு கொடுத்து ரகளை செய்திருக்கிறது எல்.வி.கணேஷ் & ஜுபின் கூட்டணி. மலைக்கிராமத்தின் பச்சைப் பசேல் அழகை சுழன்று சுருட்டியிருக்கிறது எஸ்.ஸ்ரீராமின் கேமரா.

வித்தியாசமான கதையை கலகலப்பாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.குமார். கதாபாத்திரங்களிடையே வேலை வாங்கி இருக்கலாம்.

மொத்தத்தில் கடத்தல்காரன் சுமாரானவன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!